











கார்த்திகை மாதத்தில் கரிய இருள் சூழ்ந்த காலப்பகுதியில் எம்வாழ்வில் ஒளியாகவும் உயிராகவும் உள்ள காவிய நாயகர்களுக்காக கனத்த மனதுடன் உணர்வோடு எழுச்சி கொண்டு அவர்கள் விதைத்த கல்லறை மேல் மீண்டும் ஒரு முறை சத்தியம் செய்து வல்லமை தாருங்கள் என வணங்கி உறுதி எடுக்கும் நாள் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.
இவ்வாண்டு பூலோகம் எங்கும் கோவிட் 19 தாக்கம் வீரியம் கண்டு நிற்கும் காலத்தில் எம் புனித மறவர்கள் வாழ்ந்த தேசத்தில் உலக மனிதவியலுக்கும், மாண்பியலுக்கும் மாறாக எம் மறவர்களை நினைவுகூர இலங்கை அரசு தடைவிதித்து நிற்கின்ற இந்தக் காலப்பகுதியில், நாம் வாழும் நாடுகளில் சுகாதார மற்றும் சட்டவிதிகளுக்கு அமைவாக மாவீரர் நாளை பேரெழுச்சியுடன் நினைவுகூறும் செயற்திட்டத்தை, அனைத்துலக கட்டமைப்பின் வழிகாட்டலை உள்வாங்கி மிகப் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்து எம் அன்புக்குரிய மக்களாகிய உங்களின் பேராதரவுடன் வழமை போன்று பெல்சியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் 2020 ஆம் ஆண்டிற்க்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக இடம்பெற்றது.