கடந்த 16/02/2022 பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் நெதர்லாந்து நாட்டினை ஊடறுத்து பெல்சியத்தினை வந்தடைந்தது. இன்று 21/02/2022 அன்வேர்ப்பன் மாநகரத்தில் அமைந்துள்ள தமிழீழ மாவீரர்கள் மற்றும் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லறையில் இருந்து தொடர்ந்து பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலை எழுச்சிகரமாக வந்தடைந்தது.