பெல்சியம் வாழ் தமிழர்களின் நிதிப்பங்களிப்பில் தமிழர் தாயகத்தில் தற்சார்பு பொருளாதார ஊக்குவிப்பு

14.05.2022 அன்று திருகோணமலை மாவட்டம் ஆலங்கேணி கிராமத்திலுள்ள மிகவும் வறுமையில் வாழும் 27 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூன்று வித நாற்றுகள் ஆறு வகையான பயிர் விதைகள் வழங்கப்பட்டன். இந்த ஊக்குவிப்பு உதவித்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பு பெல்சியம் வாழ் தமிழ் மக்களால் வழங்கப்பட்டது. இந்த உதவிகளைச் செய்த பெல்சியம் வாழ் தமிழ் மக்களுக்கு திருகோணமலை மாவட்ட ஆலங்கேணி கிராம மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.